search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு தொழிலாளி நசுங்கி பலி
    X

    திருமங்கலம் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு தொழிலாளி நசுங்கி பலி

    திருமங்கலம் அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து அமுக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வி.அம்மாபட்டி கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40). பாரம் ஏற்றும் தொழிலாளி.

    இவர் காடனேரியில் உள்ள கல்குவாரிக்கு கல் பாரம் ஏற்றிச் சென்றார். டிராக்டரில் மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து கற்களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது குவாரியின் மேல் பகுதியில் இருந்து பாறை உருண்டு வந்து அமுக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அய்யாச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×