search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    கோவை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    கோவை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை வீரகேரளம் அருகே உள்ள பெரிய தோட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வர்குமார் (வயது 39). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெருமாள் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் சுவிட்சை போடுவதற்காக சென்றார்.

    அப்போது அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஈஸ்வர்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×