என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்27 Nov 2018 11:57 AM GMT (Updated: 27 Nov 2018 11:57 AM GMT)
பழனியில் இன்று நடந்து சென்ற பெண்ணிடம் 6 புவுன் நகை பறித்த கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகில் உள்ள புஸ்பத்தூரை சேர்ந்த பிச்சை முத்து மனைவி ஞானம்மாள் (வயது50). இவர் இன்று காலை கோவிலுக்கு செல்வதற்காக நடந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
அவர் சத்தம்போட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தும் பைக் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
பழனியில் பைக் கொள்ளையர்களின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக இல்லாமல் காணப்பட்டது. தற்போது மீண்டும் தங்கள் கைவரி சையை காட்ட தொடங்கி இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஞானம்மாள் சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X