search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலி
    X

    பொள்ளாச்சியில் பன்றி காய்ச்சலுக்கு மூதாட்டி பலி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலியானார். #Swineflu
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அன்னபூரணி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை டாக்டர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அன்னபூரணியை பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்னபூரணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 28 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 65 பேர் என மொத்தம் 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu

    Next Story
    ×