என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம்-செல்போன் பறிப்பு
மதுரை:
மதுரை அருகே உள்ள அப்பன்திருப்பதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 40). இவர் நேற்றிரவு நரிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் நாகேந்திரனை வழிமறித்து பணம்- செல்போனை தருமாறு மிரட்டியது. ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நாகேந்திரனை பட்டா கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது.
கத்திக்குத்தில் காயமடைந்த நாகேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை நகரில் நாள் தோறும் சர்வ சாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் எந்தவித தயக்கமுமின்றி குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்