search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம்-செல்போன் பறிப்பு
    X

    மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம்-செல்போன் பறிப்பு

    மதுரையில் வாலிபரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள அப்பன்திருப்பதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 40). இவர் நேற்றிரவு நரிமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் நாகேந்திரனை வழிமறித்து பணம்- செல்போனை தருமாறு மிரட்டியது. ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நாகேந்திரனை பட்டா கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியது.

    கத்திக்குத்தில் காயமடைந்த நாகேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை நகரில் நாள் தோறும் சர்வ சாதாரணமாக வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுக்காததால் சமூக விரோதிகள் எந்தவித தயக்கமுமின்றி குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×