search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
    X

    சேலத்தில் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

    சேலத்தில் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம், சூரமங்கலத்தை அடுத்த சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). இவர் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு கடையில் யு.பி.எஸ் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு சோளம்பள்ளம் ஜங்சன் அருகே உள்ள தாரமங்கலம் ரோட்டில் தனது வீட்டிற்கு செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த 2 பேர் விஜயக்குமாரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமார் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் எஸ்.ஐ. கேசவன் தாரமங்கலம் ரோட்டில் துரத்தி சென்று கே.ஆர்.தோப்பூர் அருகே அவர்கள் 2 பேரையும் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 2 பேரும் தாதகாப்பட்டியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் ரமேஷ் கண்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது குறித்து எஸ்.ஐ. கேசவன் கூறும்போது, சமீபகாலமாக செல்போன் திருட்டு சேலத்தில் அதிகளவில் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    இதனால் நாங்கள் செல்போன் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். பொதுமக்கள் ரோட்டில் செல்லும் போதோ அல்லது பஸ்சில் பயணம் செல்லும் போதோ பாதுகாப்பாக செல்போனை பயன்டுத்த வேண்டும் என்றார்.

    Next Story
    ×