என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானல் அருகே விஷம் குடித்து கணவர் தற்கொலை
Byமாலை மலர்24 Oct 2018 6:05 PM GMT (Updated: 24 Oct 2018 6:05 PM GMT)
கொடைக்கானல் அருகே மனைவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்ததால் விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரும்பாறை:
கொடைக்கானல் அருகே உள்ள பி.எல்.செட்டு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கும், நல்லூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்த செல்வராணி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான சசிக்குமார், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கோபித்து கொண்டு செல்வராணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் தனது மனைவியை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது செல்போனுக்கு வந்த முகநூல் (பேஸ்புக்) பதிவை பார்த்து கொண்டிருந்தார். அதில், தனது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் முத்தமிடும் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர், கே.சி.பட்டியில் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) வாங்கி குடித்தார்.
பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவியிடம் இதுதொடர்பாக கேட்டார். அவரும், அந்த படத்தை உறுதி செய்வது போல பேசியதாக தெரிகிறது. சிறிதுநேரத்தில் சசிக்குமார் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே உள்ள பி.எல்.செட்டு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கும், நல்லூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்த செல்வராணி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான சசிக்குமார், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கோபித்து கொண்டு செல்வராணி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் தனது மனைவியை அழைத்து செல்வதற்காக மாமனார் வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது செல்போனுக்கு வந்த முகநூல் (பேஸ்புக்) பதிவை பார்த்து கொண்டிருந்தார். அதில், தனது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் முத்தமிடும் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர், கே.சி.பட்டியில் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) வாங்கி குடித்தார்.
பின்னர் மாமனார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவியிடம் இதுதொடர்பாக கேட்டார். அவரும், அந்த படத்தை உறுதி செய்வது போல பேசியதாக தெரிகிறது. சிறிதுநேரத்தில் சசிக்குமார் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X