search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரில் கடத்தப்பட்ட 118 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் கைது
    X

    காரில் கடத்தப்பட்ட 118 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் கைது

    கரூர் அருகே காரில் கடத்தப்பட்ட 118 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
    கரூர்:

    கரூர் காந்திகிராமத்தில் கரூர்- திருச்சி மெயின்ரோட்டில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் இந்துராணி தலைமையிலான போலீசார் கடந்த 17-ந் தேதி மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு காரினை வழிமறித்து போலீசார் சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர், தாந்தோன்றிமலை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பழனிவேல் என்கிற அசோக்(வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், கரூரில் பதுக்கி வைத்து விற்பதற்காக புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். அவரிடமிருந்து கார், 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×