search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் போலீசாரின் வாக்கிடாக்கியை உடைத்த வாலிபர் கைது
    X

    குடிபோதையில் போலீசாரின் வாக்கிடாக்கியை உடைத்த வாலிபர் கைது

    மாதவரம் அருகே வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது ஏட்டுவின் வாக்கி டாக்கியை பிடுங்கி தரையில் போட்டு உடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
    மாதவரம்:

    மாதவரம் சண்முகம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், லாரி டிரைவர்.

    இவர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு குடித்துவிட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதுபற்றி கஜேந்திரன் மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து ஏட்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

    விசாரணை நடந்த போது ஏட்டு மனோகரன் வாக்கி டாக்கியை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். இதையடுத்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீது போலீசாரை தரக்குறைவாக பேசியதாகவும், அரசு சொத்தை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×