search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருது சகோதரர்களைபோல் முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகிறார்கள்- அமைச்சர் உதயகுமார்
    X

    மருது சகோதரர்களைபோல் முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகிறார்கள்- அமைச்சர் உதயகுமார்

    மருது சகோதரர்களைப்போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #Udhayakumar
    திசையன்விளை:

    திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைத்திட உத்தரவிட்ட முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திசையன்விளை நேரு திடலில் நேற்று இரவு நடந்தது.

    அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது திசையன் விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வருவாய் கிராமங்கள் தேவையான அளவு இல்லாத நிலையில் மக்களுக்காக திட்டம் திட்டத்திற்காக மக்கள் அல்ல என்ற அடிப்படையில் தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை புதிதாக 27 வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது சரித்திர சாதனையாகும். மகத்தான மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.


    அதற்காக மருது சகோதரர்களைப்போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 1½ கோடி தொண்டர்களை கொண்ட இந்திய அளவில் 3-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. அதை கலைக்க நினைப்பவர்கள் விரைவில் கலைந்து போவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். #ADMK #Udhayakumar #EdappadiPalaniswami #OPanneerSelvam
    Next Story
    ×