என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யலூர், வடமதுரை பகுதியில் பெண்களை அச்சுறுத்தும் குடிமகன்கள்
Byமாலை மலர்29 Aug 2018 11:41 AM GMT (Updated: 29 Aug 2018 11:41 AM GMT)
வடமதுரை, அய்யலூர் பகுதியில் குடிமகன்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் 4 வழிச்சாலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால் குடிமகன்கள் காணப்பாடி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மதுவாங்கி குடித்து வந்தனர். மேலும் பெட்டிக்கடை மற்றும் பழக்கடைகளில் வைத்து மது விற்பனை செய்து வந்ததால் புத்தூர் சாலையில் குடிமகன்கள் ரகளை மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அப்பகுதியை கடக்க பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைந்தனர். மேலும் ஒருசில மாணவிகளையும் கடத்திச்சென்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
தற்போது 4 வழிச்சாலை அருகே உள்ள கடைகளிலேயே அதிகவிலை கொடுத்து மதுவாங்கி குடிக்கின்றனர். பின்பு பஸ் நிறுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு அரைநிர்வாண கோலத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பல கூலித்தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காலை நேரத்திலேயே வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்கின்றனர்.
இதனால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிப்படைகின்றது. இதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து வந்து அனுமதியின்றி மதுவிற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் 4 வழிச்சாலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால் குடிமகன்கள் காணப்பாடி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மதுவாங்கி குடித்து வந்தனர். மேலும் பெட்டிக்கடை மற்றும் பழக்கடைகளில் வைத்து மது விற்பனை செய்து வந்ததால் புத்தூர் சாலையில் குடிமகன்கள் ரகளை மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அப்பகுதியை கடக்க பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைந்தனர். மேலும் ஒருசில மாணவிகளையும் கடத்திச்சென்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
தற்போது 4 வழிச்சாலை அருகே உள்ள கடைகளிலேயே அதிகவிலை கொடுத்து மதுவாங்கி குடிக்கின்றனர். பின்பு பஸ் நிறுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு அரைநிர்வாண கோலத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பல கூலித்தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காலை நேரத்திலேயே வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்கின்றனர்.
இதனால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிப்படைகின்றது. இதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து வந்து அனுமதியின்றி மதுவிற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X