என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.6,700 உண்டியல் சேமிப்பினை வழங்கிய பள்ளி மாணவர்கள்
Byமாலை மலர்22 Aug 2018 12:28 PM GMT (Updated: 22 Aug 2018 12:28 PM GMT)
கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்டியலில் ஒரு வருடம் சேமித்த ரூ.6,700 பணத்தை பள்ளி மாணவர்கள் வழங்கினர்.
திருச்சி:
இதனால் கேரளா மக்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி அடுத்த மாத்தூரில் கிராம பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் கல்லூரிகள் பள்ளிகள் ஊர் முக்கியஸ்தர்கள் தாமாக முன் வந்து நிவாரண பொருட்களை மாத்தூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வழங்கி வந்தனர்.
இதனை பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக ஆய்வாலர் சத்தியப்பிரியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில், பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களான 100 மூட்டை அரிசி, 50 மூட்டை கோதுமை, 10 பெட்டி பிஸ்கட்டுகள், 2 பெட்டி டீ சர்ட்டுகள், 50 படுக்கை விரிப்புகள், 100 கைலிகள், 100 வேட்டி- சேலைகள், சமையல் எண்ணைகள் 10 பண்டல் குளிர்பான வகைகள், மருந்து பொருட்கள் 50 பெட்டிகளை வழங்கினர்.
இதில் மண்டையூர் ஊராட்சியை சேர்ந்த பள்ளி மாணவர்களான அட்சிதா, 1-ம் வகுப்பு மாணவனான ஜெகதீப், அக்கா-தம்பிகளான இருவரும் தாங்கள் உண்டியலில் ஒரு வருடம் சேமித்த காசுகளை மாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நண்பர்களுடன் கொண்டு வந்து உண்டியலை வழங்கினர்.
இவரின் உண்டியலிலும் மொத்தம் ரூ.6 ஆயிரத்து 700 இருந்தது. அதனை பெற்றுக்கொண்ட மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ்வரன மற்றும் பொதுமக்கள் மாணவர்களை பாராட்டினர். பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ளது.
அவை அனைத்தையும் 2 மினி லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர். மாத்தூர் ஊராட்சியில் நிவாரண பொருட்களை வழங்கிய பொதுமக்களை கலெக்டர் கணேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குளத்தூர் வட்டாச்சியர் பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X