search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்கவாத நோயால் அவதிப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பக்கவாத நோயால் அவதிப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை

    கரூர் அருகே பக்கவாத நோயால் அவதிப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு எஸ்.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 50). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரசேகரன் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா மற்றும் போலீசார் சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×