search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வாலிபர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல்- போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
    X

    2 வாலிபர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல்- போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை

    திருட்டு வழக்கை விசாரிக்க சென்ற போது 2 வாலிபர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்தியது குறித்து கிராம மக்கள் கும்மிடிபூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதய பிரகாஷ்.

    நேற்று இரவு அவர் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த திவாகரன், விஜய் ஆகியோருடன் சாமிரெட்டி கண்டிகை கிராமத்திற்கு ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க சென்றார்.

    அப்போது அனைவரும் சாதாரண உடையில் இருந்ததாக தெரிகிறது. விசாரணையின் போது அதே பகுதியை சேர்ந்த கணபதி, நந்தகுமார் ஆகியோருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் உதய பிரகாஷ் தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கணபதி, நந்தகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். இதுபற்றி அறிந்ததும் கிராம மக்கள் கும்மிடிபூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்துபோக செய்தனர்.

    காயமடைந்த கணபதி, நந்தகுமாருக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் தாக்குதல் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் மீதும் புகார் தெரிவித்து உள்ளனர். இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் உதயபிரகாசும் பொதுமக்கள் தங்களை தாக்கியதாக புகார் தெரிவித்து உள்ளார். #tamilnews
    Next Story
    ×