search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி தேமுதிக சார்பில் சிறப்பு வழிபாடு
    X

    விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி தேமுதிக சார்பில் சிறப்பு வழிபாடு

    தா.பேட்டை அருகே விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் கிராமத்தில் கொல்லிமலை அடி வாரத்தில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோவிலில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். அப்போது தே.மு.தி.க நிறுவன தலை வர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இதில் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, பிள்ளாபாளையம் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×