search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது- நீதிபதிகள் கண்டனம்
    X

    நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது- நீதிபதிகள் கண்டனம்

    நீட் தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #NEET #NEETExam
    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டி ருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் தரவரிசை பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது என ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


    அப்போது சி.பி.எஸ்.இ. நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது.

    நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்?

    வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #NEET #NEETExam
    Next Story
    ×