search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்வி கடன் பிரச்சினை- ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மாணவி அப்பீல்
    X

    கல்வி கடன் பிரச்சினை- ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மாணவி அப்பீல்

    கல்வி கடன் பிரச்சனை தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்த்து நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் நிராகரித்தது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவியின் தந்தை கடன் வாங்கி திருப்பித்தரவில்லை. பல தவணைகளை செலுத்தாமல் உள்ளார். மேலும், நர்சிங் படிப்பு கல்விக்கடன் பெறும் படிப்புகளுக்கான பட்டியலில் இல்லை. அதனால், இவருக்கு கடன் வழங்க முடியாது’ என வாதிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், கடன் கொடுத்து விட்டு, கடனாளி பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதை விட, கடன் கொடுக்காமல் இருப்பதே மேலானது என்று தீர்ப்பு அளித்தார். மாணவிக்கு கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் தந்தை எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. எனவே, தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.#tamilnews
    Next Story
    ×