என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சொக்கநாதன் பேட்டையில் மாமூல்தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு சொக்கநாதன்பேட்டை தட்சிணாமூர்த்தி நகர் மெயின்ரோட்டில் மளிகைகடை நடத்தி வருபவர் கேசவன் (வயது 35). சம்பவத்தன்று இரவு இவர் மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கேசவனிடம் மாமூல் பணம் கேட்டனர். ஆனால் கேசவன் மாமூல் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமூல் பணம் தராவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.
இதையடுத்து கேசவன் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கேசவனை கத்தியை காட்டி மிரட்டியது சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்த தமிழ்மணி (24) மற்றும் ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த மூர்த்தி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்