search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொக்கநாதன் பேட்டையில் மாமூல்தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது
    X

    சொக்கநாதன் பேட்டையில் மாமூல்தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

    சொக்கநாதன்பேட்டையில் மாமூல்தர மறுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு சொக்கநாதன்பேட்டை தட்சிணாமூர்த்தி நகர் மெயின்ரோட்டில் மளிகைகடை நடத்தி வருபவர் கேசவன் (வயது 35). சம்பவத்தன்று இரவு இவர் மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கேசவனிடம் மாமூல் பணம் கேட்டனர். ஆனால் கேசவன் மாமூல் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமூல் பணம் தராவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

    இதையடுத்து கேசவன் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கேசவனை கத்தியை காட்டி மிரட்டியது சண்முகாபுரம் அணைக்கரை வீதியை சேர்ந்த தமிழ்மணி (24) மற்றும் ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த மூர்த்தி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×