என் மலர்
செய்திகள்

X
வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது
By
மாலை மலர்12 Jun 2018 11:11 PM IST (Updated: 12 Jun 2018 11:11 PM IST)

வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியில் அருள் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல தோப்புத்துறையில் விஜயகுமார் (37) என்பவரது கடையில் சோதனை செய்த போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியில் அருள் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல தோப்புத்துறையில் விஜயகுமார் (37) என்பவரது கடையில் சோதனை செய்த போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
X