search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two persons"

    பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கு
    இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 
     
    அப்போது கலைந்துசென்ற நபர்கள் திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் செல்வகுமாரை அங்கிருந்து வரவழைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். #PonnamaravathiViolence
    பெசன்ட்நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்த சிறுவன் உள்பட 2 பேர் கடலில் மூழ்கி நேற்று பலியாகினர்.
    அடையாறு:

    சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள சென்னை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

    இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது 17), விக்னேஷ் (20) ஆகியோர் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் நேற்று மாலை பெசன்ட் நகர் வந்தனர்.

    நண்பர்களுடன் அவர்கள் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது, சதீஷ், விக்னேஷ் ஆகியோர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் கூச்சலிட்டனர்.

    உடனே அங்கு இருந்த சிலர் கடலில் குதித்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் இறந்து விட்டனர்.

    தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் தற்போது திருவிழா நடந்து வருவதால், வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கடலில் குளிப்பவர்களை கட்டுப்படுத்துவதுடன், கண்காணிப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    வேதாரண்யம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியில் அருள் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல தோப்புத்துறையில் விஜயகுமார் (37) என்பவரது கடையில் சோதனை செய்த போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள், விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். 
    ×