search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் சரமாரி குத்திக் கொலை
    X

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் சரமாரி குத்திக் கொலை

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடைரோடு:

    மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் புரோட்டா கடை வைத்துள்ளார். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 21). மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.

    இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். இவருடன் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த பூபதி (21), ஆலங்குளத்தைச் சேர்ந்த நாகசூர்யா (21), செல்லூரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (22) ஆகியோரும் சென்றனர்.

    4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் கோவைக்கு சென்று விட்டு நேற்று இரவு மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு அருகே வந்தபோது சிறுநீர் கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு 4 பேரும் இறங்கினர்.

    அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 4 பேர் அங்கே இறங்கி தகராறு செய்தனர். தகராறு முற்றவே கத்தியால் அந்த கும்பல் அவர்களை மிரட்டியது. இதனால் மோகன்ராஜ் தரப்பினர் தப்பி ஓட முயன்றனர்.

    அந்த சமயத்தில் மோகன் ராஜ் தவறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த கும்பல் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் வந்த வாலிபர்களிடம் கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மோகன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை கொலையாளிகள் பின் தொடர்ந்து வந்து இதனை செய்திருப்பதால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது காதல் பிரச்சினை காரணமாக நடந்ததா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் ராஜேஷ் வந்து முக்கிய தடயங்களை பதிவு செய்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×