search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே மனைவியை தாக்கி கொல்ல முயன்ற கணவர்
    X

    தேனி அருகே மனைவியை தாக்கி கொல்ல முயன்ற கணவர்

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுத்தை சேர்ந்த பால்பாண்டி மகள் சரண்யா (வயது28). இவருக்கும் பொம்மையகவுண்டன் பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (39) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 5 வருடமாக கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த சிலம்பரசன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கும் சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்வத்தன்று இது குறித்து ஏற்பட்ட தகராறில் லட்சுமி அவரது உறவினர்கள் ராஜேஷ், கஸ்தூரி, ரகு ஆகிய 4 பேரும் சேர்ந்து கருப்பாயி அம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து அவரது பேரன் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரியை கைது செய்தனர்.

    Next Story
    ×