search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    மதுரை அருகே கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு

    மதுரை அருகே கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் சின்னாத்தேவர். இவரது மனைவி ராணி (வயது 55). இவர் மதுரை மாவட்டம், நாட்டார் மங்கலத்தில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

    அவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி கழுவாயி (70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கழுவாயி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×