search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் 23 பேருடன் வேல்முருகன் 2-வது நாளாக உண்ணாவிரதம்
    X

    புழல் சிறையில் 23 பேருடன் வேல்முருகன் 2-வது நாளாக உண்ணாவிரதம்

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் சிறையில் 23 பேருடன் வேல்முருகன் 2-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest #Velmuruganfasting

    சென்னை:

    கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.


    அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள், புரட்சிகர இளைஞர்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்களும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    ஏற்கனவே வேல்முருகன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், இப்போது 3 இயக்கங்களை சேர்ந்த மேலும் 22 பேர் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். வேல்முருகனுடன் மொத்தம் 23 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

    வேல்முருகன் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது. புழல் சிறையில் 23 பேர் உண்ணாவிரதம் இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Thoothukudifiring #bansterlite #SterliteProtest #Velmuruganfasting

    Next Story
    ×