search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே வாலிபர் மர்ம மரணம்: மனைவில் போலீசில் புகார்
    X

    ராஜபாளையம் அருகே வாலிபர் மர்ம மரணம்: மனைவில் போலீசில் புகார்

    ராஜபாளையம் அருகே கணவர் சாவில் மர்மம் உள்ளது என அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவரம் பட்டியைச்சேர்ந்தவர் மாடசாமி (வயது 26). டிராக்டரில் மணல் ஏற்றும் லோடு மேனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மாடசாமியை அம்மன்பொட்டல் தெரு வைச்சேர்ந்த பால்பாண்டி, மேல ஆவரம்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.

    இந்த நிலையில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்ததில் மாடசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்று கூறி மாடசாமியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.

    அதிர்ச்சியடைந்த மாடசாமியின் மனைவி ராமலட்சுமி மற்றும் உறவினர்கள் மாடசாமியை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாடசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமலட்சுமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×