என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையம் அருகே வாலிபர் மர்ம மரணம்: மனைவில் போலீசில் புகார்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவரம் பட்டியைச்சேர்ந்தவர் மாடசாமி (வயது 26). டிராக்டரில் மணல் ஏற்றும் லோடு மேனாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மாடசாமியை அம்மன்பொட்டல் தெரு வைச்சேர்ந்த பால்பாண்டி, மேல ஆவரம்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் டிராக்டரில் இருந்து தவறி விழுந்ததில் மாடசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்று கூறி மாடசாமியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.
அதிர்ச்சியடைந்த மாடசாமியின் மனைவி ராமலட்சுமி மற்றும் உறவினர்கள் மாடசாமியை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாடசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராமலட்சுமி ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்