search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: 4 பேர் கைது
    X

    திருமங்கலம் அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: 4 பேர் கைது

    16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக வாலிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று நடக்க இருந்தது. திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்து சமூக நல அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது.

    அவர், சிந்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசாரும், சமூக நல அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு முத்துப்பட்டி காப்பக இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ரஞ்சித்குமார், அவரது தந்தை முருகன், தாய் முத்துச்சரம் மற்றும் சிறுமியின் உறவினர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×