என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி கலவரம்: நெல்லையில் 8 போலீசாருக்கு தொடர்ந்து சிகிச்சை
Byமாலை மலர்25 May 2018 11:42 AM GMT (Updated: 25 May 2018 11:42 AM GMT)
தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த 8 போலீசாருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
நெல்லை:
தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், கலவரத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதல்நாள் 43 போலீசாரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்சங்கர் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும் பாளை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் மறுநாளே 20 போலீசார் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதிலும் நேற்று பெரும்பாலான போலீசார் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 போலீசார் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளியைச் சேர்ந்த சுகுமார் (21) என்பவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், கலவரத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதல்நாள் 43 போலீசாரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்சங்கர் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும் பாளை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் மறுநாளே 20 போலீசார் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதிலும் நேற்று பெரும்பாலான போலீசார் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 போலீசார் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபோல புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளியைச் சேர்ந்த சுகுமார் (21) என்பவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X