என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை புறநகரில் நடந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலி
கோவை:
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 47). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது லோடு ஆட்டோவில் சகோதரர்களான செல்வம் (46), சேகர் (45) ஆகியோருடன் கோவை-பாலக்காடு ரோட்டில் சென்றார். வாளையாறு சோதனை சாவடி அருகே லோடு ஆட்டோ சென்ற போது அங்கு ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் லோடு ஆட்டோவில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே டிரைவர் பாபு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சின்னாம்பட்டியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவரது மகன் மோகன் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாகமநாயக்கன் பாளையம்- பீடம்பள்ளி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மோகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்