search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே போலீஸ் போல நடித்து நகை கொள்ளை
    X

    பொன்னேரி அருகே போலீஸ் போல நடித்து நகை கொள்ளை

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் போலீஸ் போல நடித்து செல்போன் மற்றும் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார்.

    இரவு 11.30 மணியளவில் காரில் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டில் சோதனை போட வேண்டும் என்றனர். உடனே புருசோத்தமன் வீட்டு கதவை திறந்தார். 5 பேரும் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த 3 செல்போன்களை எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் புருஷோத்தமனின் மகன் கார்த்திக் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து புருஷோத்தமன் சோழவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×