என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் இரட்டை கொலை- உறவினர்கள் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்15 May 2018 11:05 AM GMT (Updated: 15 May 2018 11:05 AM GMT)
திண்டுக்கல் இரட்டை கொலையில் உறவினர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கேகம்பூர் யூசுப்பியா நகரை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது55). இவரது மனைவி கொலுசன் பீபி (50). இவர்களது மகன் சேக்பரீத் (27) என்பவருக்கும் மதினாபேகம் (19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
உடல் நலக்குறைவால் மதினாபேகம் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தங்கையை சரியாக கவனிக்காததால்தான் அவர் இறந்து விட்டதாக மதினாபேகத்தின் சகோதரர்கள் கோபத்தில் இருந்தனர்.
மேலும் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சேக்பரீத் வீட்டிற்கு சென்ற கும்பல் கத்தியால் கொலுசன்பீபி, அவரது தங்கை பரக்கத்நிஷா ஆகியோரை குத்தி கொலை செய்தனர். சாகுல்அமீதுக்கும் கத்தி குத்து விழுந்தது.
இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதினாபேகத்தின் சகோதரர்கள் இஸ்மாயில், சதாம்உசேன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் கேகம்பூர் யூசுப்பியா நகரை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது55). இவரது மனைவி கொலுசன் பீபி (50). இவர்களது மகன் சேக்பரீத் (27) என்பவருக்கும் மதினாபேகம் (19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
உடல் நலக்குறைவால் மதினாபேகம் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தங்கையை சரியாக கவனிக்காததால்தான் அவர் இறந்து விட்டதாக மதினாபேகத்தின் சகோதரர்கள் கோபத்தில் இருந்தனர்.
மேலும் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சேக்பரீத் வீட்டிற்கு சென்ற கும்பல் கத்தியால் கொலுசன்பீபி, அவரது தங்கை பரக்கத்நிஷா ஆகியோரை குத்தி கொலை செய்தனர். சாகுல்அமீதுக்கும் கத்தி குத்து விழுந்தது.
இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதினாபேகத்தின் சகோதரர்கள் இஸ்மாயில், சதாம்உசேன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X