search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே தீ குளித்து மூதாட்டி தற்கொலை
    X

    பாபநாசம் அருகே தீ குளித்து மூதாட்டி தற்கொலை

    பாபநாசம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 65 வயதான மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரி அண்ணா தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மரகதம் (வயது 65). விவசாயக்கூலி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகாததால் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

    இது குறித்து அவரது மகன் மாதவன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×