என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாட்டில் பெண் அடித்து கொலை- மகனிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்11 May 2018 11:18 AM GMT (Updated: 11 May 2018 11:18 AM GMT)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜெயராணி தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் மாடு மேய்க்க ஜெயராணி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோப்பில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜெயராணி பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த மகன் சக்திவேல் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்த ஜெயராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் 2 தங்க சங்கிலியை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தது.
எனவே கொள்ளை சம்பவத்தில் ஜெயராணி கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தோடு, மூக்குத்தி திருட்டு போகாமல் இருந்ததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் முதற்கட்டமாக அவரது மகன் சக்திவேலிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில் ஜெயராணி மாடு மேய்க்க செல்லும் போது கழுத்தில் 10 பவுன் செயின் போட்டு சென்றாரா? என்று விசாரிக்கப்பட்டது.
மேலும் ஜெயராணியின் அவரது உறவினர் மற்றும் ஊர் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலையூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி ஜெயராணி (வயது 55). இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜெயராணி தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் மாடு மேய்க்க ஜெயராணி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே அவரது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தோப்பில் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஜெயராணி பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த மகன் சக்திவேல் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்த ஜெயராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் 2 தங்க சங்கிலியை காணவில்லை. ஆனால் அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை அப்படியே இருந்தது.
எனவே கொள்ளை சம்பவத்தில் ஜெயராணி கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தோடு, மூக்குத்தி திருட்டு போகாமல் இருந்ததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் முதற்கட்டமாக அவரது மகன் சக்திவேலிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில் ஜெயராணி மாடு மேய்க்க செல்லும் போது கழுத்தில் 10 பவுன் செயின் போட்டு சென்றாரா? என்று விசாரிக்கப்பட்டது.
மேலும் ஜெயராணியின் அவரது உறவினர் மற்றும் ஊர் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X