search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூரில் நர்சு வீட்டில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை
    X

    அலங்காநல்லூரில் நர்சு வீட்டில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை

    அலங்காநல்லூரில் நர்சு வீட்டுக்குள் புகுந்து 28 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் நிலை நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு எர்ரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் மகாலட்சுமியின் வீட்டு கதவை போலி சாவி போட்டு திறந்து உள்ளே சென்றனர்.

    அங்கிருந்த பீரோ மற்றும் அலமாரியை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுபற்றி அறிந்த மகாலட்சுமி அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×