என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் கல்லூரி மேலாளர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்2 May 2018 10:01 AM GMT (Updated: 2 May 2018 10:01 AM GMT)
திருவண்ணாமலையில் தனியார் பி.எட். கல்லூரி மேலாளர் வீட்டில் 12 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேலு (வயது 68). தனியார் பி.எட் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வில்வராணி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த தங்க நெக்லஸ், மோதிரம், கம்மல் உள்பட 12 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
வீடு திரும்பிய வஜ்ரவேலு கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பூட்டிய வீடுகளில் கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேலு (வயது 68). தனியார் பி.எட் கல்லூரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வில்வராணி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த தங்க நெக்லஸ், மோதிரம், கம்மல் உள்பட 12 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
வீடு திரும்பிய வஜ்ரவேலு கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பூட்டிய வீடுகளில் கொள்ளையை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X