என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே லாரி மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்30 Nov 2017 10:11 AM GMT (Updated: 30 Nov 2017 10:11 AM GMT)
ராயக்கோட்டை அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 22).
இவரும், அவரது நண்பருமான ராயக்கோட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி(18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். பின்னால் கிருஷ்ணமூர்த்தி அமர்ந்திருந்தார். இவர்கள் அங்குள்ள ஒரு திருமணம் மண்டபம் அருகே சென்றபோது தர்மபுரியில் இருந்து ஓசூரை நோக்கி வந்த லாரி நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டு கிருஷ்ணமூர்த்தி லாரியின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அருண்குமாருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எனவே அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள பாஞ்சாலி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 22).
இவரும், அவரது நண்பருமான ராயக்கோட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி(18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு சாலையில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். பின்னால் கிருஷ்ணமூர்த்தி அமர்ந்திருந்தார். இவர்கள் அங்குள்ள ஒரு திருமணம் மண்டபம் அருகே சென்றபோது தர்மபுரியில் இருந்து ஓசூரை நோக்கி வந்த லாரி நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டு கிருஷ்ணமூர்த்தி லாரியின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.
இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அருண்குமாருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எனவே அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X