என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Nov 2017 12:26 PM GMT (Updated: 13 Nov 2017 12:26 PM GMT)
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களில் இருந்து நிரந்தர விடுதலை அளிக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு நியாயமான கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகி லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். மேலும் சச்சிதானந்தம், தண்டபாணி, காபி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிக்கோலஸ், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த யோகலிங்கம், பரமசிவம், சுந்தர்ராஜன், முத்துசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் வரும் 20-ந் தேதி டெல்லிக்கு சென்று தஙகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப் போவதாகவும், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களில் இருந்து நிரந்தர விடுதலை அளிக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு நியாயமான கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகி லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். மேலும் சச்சிதானந்தம், தண்டபாணி, காபி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிக்கோலஸ், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த யோகலிங்கம், பரமசிவம், சுந்தர்ராஜன், முத்துசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் வரும் 20-ந் தேதி டெல்லிக்கு சென்று தஙகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப் போவதாகவும், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X