என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமாகாத ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2017 5:25 PM GMT (Updated: 22 Oct 2017 5:25 PM GMT)
கோத்தகிரி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 34). சரக்கு வாகன டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. நேற்று அதிகாலை அவரது உறவினர்கள் தேடிய போது அவர் ஒரு தனியார் தொழிற்சாலை அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி அருகே உள்ள அரவேனு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சுப்பிரமணி (வயது 34). சரக்கு வாகன டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. நேற்று அதிகாலை அவரது உறவினர்கள் தேடிய போது அவர் ஒரு தனியார் தொழிற்சாலை அருகில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருமணமாகாத ஏக்கத்தில் சுப்பிரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X