search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
    X

    கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

    அமரவிளை சோதனைச்சாவடியில் கேரளாவுக்கு பஸ்சில் கடத்திய 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    களியக்காவிளை:

    நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு இன்று அதிகாலை கேரள அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் களியக்காவிளை அருகே அமரவிளை சோதனைச் சாவடியில் சென்றபோது கேரள மதுவிலக்கு போலீசார் பஸ்சில் சோதனை மேற்கொண்டனர்.

    பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. அப்போது பேக் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தி சென்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கஞ்சாவை நாகர்கோவிலில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ராஜனுக்கு கஞ்சாவை விற்பனை செய்தது யார்? என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் இருந்து கஞ்சாவை வாங்கிச் சென்றதாக ராஜன் கூறியதை அடுத்து போலீசார் நாகர்கோவிலில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா வியாபாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தியதாக சுகுணன் என் பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×