search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    தஞ்சையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    தஞ்சையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள அய்யம்பேட்டை திருநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (44). தொழிலாளி. இவர் தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். திடீரென அவர் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×