என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாமகிரிபேட்டை அருகே காதல் திருமணம் செய்த விவசாயி தற்கொலை
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டமபட்டி விளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 27). இவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. கிணற்றில் தண்ணீர் இல்லை என்பதால் சதீஸ்குமார் ரூ.2 லட்சம் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு போட்டுள்ளார். அதிலும் தண்ணீர் வரவில்லை. 2 லட்சம் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு போட்டும் தண்ணீர் வரவில்லையே என்று மனம் உடைந்த விவசாயி சதீஸ்குமார் கடந்த 26-ந் தேதி அவரது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தபின்பு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். சதீஸ்குமார் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தாராபேகம் (25) என்ற முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வர்ஷினி (6) என்ற மகளும், மவுனிக்குமார் (3) என்ற மகனும் உள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சதீஸ்குமார் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்