search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்தவர் ராஜா(வயது 38). இவர் திருக்கோவிலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண் டார். பின்னர் நேற்று இரவு திருக்கோவிலூரில் இருந்து ராஜா தனது மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான திருவெண்ணை நல்லூருக்கு புறப்பட்டார்.

    அவர் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள அம்மாசிபாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜா தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×