என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மாடுகள் திருடிய 2 பேர் கைது
- உத்தண்டுராஜ் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார்.
- பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் முருகேசன்நகர் பகுதியை சேர்ந்தவர் உத்தண்டுராஜ். (வயது 39).
இவர் கடந்த 15-ந் தேதி இரவு தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (24), மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மாட்டு கொட்டகைகளில் கட்டியிருந்த 2 மாடுகளை மினிலாரி மூலம் திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், வேலாயுதம், மாசானமுத்துவை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மாடுகள், மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்