search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    நாம் தமிழர் கட்சி வென்றால் அது புரட்சி- சீமான்

    இந்தியாவை விற்பதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் போட்டி நடக்கிறது. நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் (தனி)தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க. சிங்களர்களுக்கு கைகொடுத்து ஈழத்தில் தமிழர்களை அழித் தொழித்தனர். இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆள வேண்டிய நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் வாழவேண்டும் என்று நினைக்கவில்லை.

    இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி வருவாய்களை மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசை எதிர்க்க சிங்கப்பெண்ணே பாடலைப்போல் மம்தா பானர்ஜி உள்ளார்.

    இந்தியாவை விற்பதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் போட்டி நடக்கிறது. நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை.

    மக்களின் புரட்சி ஒன்று தான் இவற்றை எல்லாம் சரிசெய்யும். நமக்கு கிடைக்காத நீர் முதலாளிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என யோசித்து பார்க்க வேண்டும்.

    அம்பேத்கர் நள்ளிரவு வரை படித்து கொண்டிருந்ததைப்போல் நான் இவற்றை எல்லாம் எப்படி சரி செய்வது என சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.

    தொடர்ந்து பேசிய சீமான், முட்டாள் தேருக்கு முட்டுக் கொடுப்பவன், மடையன் மடைப்பகுதிகளை பராமரிப்பவன் என இரண்டு சொல்லுக்கு விளக்கமளித்த சீமான் கண்டிப்பாக வர வேண்டும் என சொல்லக் கூடாது, உறுதியாக வரவேண்டும் என்று சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் அ.தி.மு.க., தி.மு.க. வெல்வது நிகழ்வு. நாம் தமிழர் வென்றால் அது வரலாறு, புரட்சி என்றார்.

    Next Story
    ×