என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் முக ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்
சேலம்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்களை அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். நாளை (16-ந் தேதி) மாலை சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகு திக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர் 17-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். மு.க. ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்