search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் ஜெயிலில் வேல்முருகன் உண்ணாவிரதம்
    X

    போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் ஜெயிலில் வேல்முருகன் உண்ணாவிரதம்

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் ஜெயிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest

    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக் கோரியும் கடந்த மாதம் 1-ந் தேதி உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் உள்ள சுங்கச் சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி சென்றார்.


    அப்போது சுங்கச் சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயிலில் இன்று காலை வேல்முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest

    Next Story
    ×