search icon
என் மலர்tooltip icon

    மொசாம்பிக்

    • விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்படுகிறது.

    தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில் தற்காலிக படகு ஒன்று மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கியபோது படம் மூழ்கியுள்ளது.

    இதுகுறித்து நம்புலாவின் மாநிலச் செயலாளர் ஜெய்ம் நெட்டோ கூறுகையில்," படகில் அதிகம் பேர் பயணித்ததாலும், படகும் அதிகம் பேர் ஏற்றிச் செல்லக்கூட நிலையில் இல்லை என்பதாலும் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பலியானவர்களில் பல குழந்தைகளும் உள்ளடங்குவர். சம்பவ இடத்தில் இருந்து 5 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பலரை தேடி வருகின்றனர். கடல் சீற்றம் காரணமாக தேடும் பணி கடினமாக உள்ளது.

    காலரா பற்றிய தவறான தகவல் பரவியதை அடுத்து, அதனால் ஏற்பட்ட பீதியின் காரணமாக பெரும்பாலான பயணிகள் படகு மூலம் தப்பிக்க முயன்றனர்" என்றார்.

    படகு விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று செயல்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
    • இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

    மேற்கு ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பிரெடி புயல் உருவானது. இதுவரை இல்லாத அளவில் மிக நீண்டகால வெப்பமண்டல புயலாக கருதப்பட்ட இந்த புயல் பிப்ரவரி 21ல் மடகாஸ்கர் வழியாகவும், பின்னர் இந்திய பெருங்கடல் முழுவதும் பரவி பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கிலும் கரைகடந்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டன.

    இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் மொசாம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரெடி புயல் தாக்கியது. அண்டை நாடான மாலாவியையும் கடுமையாக தாக்கியது. இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

    இரவு நேரம் புயல் கரை கடந்ததால் மலாவியில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 99 பேர் உயிரிழந்தனர். 134 பேர் காயமடைந்தனர். 16 பேரை காணவில்லை. மொசாம்பிக்கில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை விவகாரத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

    ×