search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Freddy"

    • ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டை பிரெட்டி என்ற பருவகால சூறாவளி தாக்கியது.
    • இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    மலாவி:

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    தெற்கு மலாவியில் பல்வேறு மாவட்டங்களின் பெரும் பகுதி சூறாவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும். இதனால், பெரு வெள்ளம் ஏற்படும். பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் வேகம் இருக்கும் என அதுபற்றிய அமைச்சக அறிக்கை எச்சரித்து இருந்தது. இதற்கேற்ப சூறாவளி புயலால் பரவலாக பாதிப்பு ஏற்பட்டது என இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்துள்ளது என பேரிடர் மேலாண் விவகார துறை தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், நிலைமை மோசமடைந்து எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதேபோல், பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என அந்தத் துறைக்கான ஆணையாளர் சார்லஸ் கலேம்பா கூறியுள்ளார்.

    இந்த சூறாவளி தாக்கத்தினால் இதுவரை 326 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. தெளிவற்ற வானிலையால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
    • இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

    மேற்கு ஆஸ்திரேலியாவின் கரையோரத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பிரெடி புயல் உருவானது. இதுவரை இல்லாத அளவில் மிக நீண்டகால வெப்பமண்டல புயலாக கருதப்பட்ட இந்த புயல் பிப்ரவரி 21ல் மடகாஸ்கர் வழியாகவும், பின்னர் இந்திய பெருங்கடல் முழுவதும் பரவி பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கிலும் கரைகடந்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டன.

    இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் மொசாம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரெடி புயல் தாக்கியது. அண்டை நாடான மாலாவியையும் கடுமையாக தாக்கியது. இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது.

    இரவு நேரம் புயல் கரை கடந்ததால் மலாவியில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 99 பேர் உயிரிழந்தனர். 134 பேர் காயமடைந்தனர். 16 பேரை காணவில்லை. மொசாம்பிக்கில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை விவகாரத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

    ×