என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
- சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுவெளியில் டாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் நபர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணி முடிவை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:-
* பா.ம.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் வலி புரியும்.
* தொண்டர்களை நினைத்து நினைத்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
* சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டோம்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தான் தேர்தலை சந்திக்க முடிவு.
* சட்டமன்ற தேர்தலில் ஏ, பி, பார்ம்களில் கையெழுத்து போடும் உரிமை எனக்கே உள்ளது.
* வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாகுங்கள் என்றார்.
- இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
- அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?. ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா?
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரிப்பது தான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று தெரிவித்த நீதிபதி, வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
- விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர்.
தஞ்சாவூா்:
சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் குமார் (வயது 57). இவர் தனது மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30) மற்றும் உறவினர்கள் ஸ்டாலின் (36), அவரது மனைவி துர்கா (32), 3 வயது குழந்தை நிலாவேணி சூர்யா ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக ஒரு காரில் புறப்பட்டார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கும்பகோணத்திற்கு வந்த அவர்கள் அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அதே காரில் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்காக புறப்பட்டனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் நாற்று ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அந்த மினிலாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார்- மினி லாரி நேருக்கு நேர் மோதின. இதில் 2 வாகனங்களும் பலத்த சேதமடைந்து தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த குமார், துர்கா, மோனிஷா, ஸ்டாலின், சிறுமி நிலாவேணி சூர்யா மற்றும் மினி லாரி டிரைவர் விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
தகவல் அறிந்த தஞ்சாவூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குமார், துர்கா, சிறுமி நிலாவேணி சூர்யா ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மோனிஷா, ஸ்டாலின், லாரி டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த 2 வாகனங்களையும் தாலுகா போலீசார் அப்புறப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சைக்கு ஆன்மீக சுற்றுலா வந்தபோது மினி லாரி மோதியதில் சென்னையை சேர்ந்த சிறுமி உள்பட 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம்.
- ம.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம்.
மதுரை:
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையை காப்பாற்றுவதற்காக ம.தி.மு.க. உண்ணாவிரதம், மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நானே வாதாடினேன். இறுதியாக நீதிபதிகள் நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
எங்கள் இயக்கம் தொடங்கி 31 வருடங்களாகி விட்டது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். தி.மு.க.விற்கு சோதனையான நேரத்தில் மற்றொரு அரணாக ம.தி.மு.க. உடன் இருக்கும். மதுவை ஒழிக்க வேண்டும் என வாய் அளவு பேசாமல் டாஸ்மாக் கடைகளை சூறையாடி நெருப்பு வைத்தார்கள் எனது தோழர்கள். 2026 தேர்தலில் கூட்டணியாக திராவிட இயக்கத்தை காக்க தி.மு.க.வுடன் உடன்பாடு கொள்கிறோம்.
ம.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் தொகுதிகளை கேட்போம். அ.தி.மு.க. திராவிட இயக்க கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதனால் அதை திராவிட இயக்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரெயில்வே துறையினர் மனிதர்களால் இயக்கப்படும் ரெயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு மின்மயமாக மாற்றி விபத்துக்கள் ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர்.
- செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் பல்வேறு நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழு கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி போன்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 21 நிர்வாகக்குழு நிர்வாகிகளை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார். அதில் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் புறக்கணித்துள்ளார்.
இதனிடையே, ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் பங்கேற்றுள்ளார். அவர் நிர்வாகிகளுடன் மேடையில் அமர்ந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் இந்த செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் செயற்குழு கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தனுக்கு பதவி அளித்தபோது ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும்.
- சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் முடிக்க வேண்டும். காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்.
வழக்கை விசாரிக்கும் அலுவலர்களை ஒருவாரத்தில் நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
பாதிக்கப்பட்ட அஜித்குமார் தாயாருக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். வழக்கு தொடர்பான விசாரணைக்கு தென்மண்டல காவல் தலைவர், மதுரை, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர்கள், சிவகங்கை ஆட்சியர் சிபிஐ-க்கு உதவ வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த தேவையான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது.
- இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
சென்னை:
மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, கடைசில மனுஷனையே கடிச்ச கதையாக ஒரு அளவே இல்லாமல் ஊழல் போனதன் விளைவாக மதுரை மாநகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் ஊழல் நடந்தது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்த முதலமைச்சரின் செயல்பாடு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.
அவர்கள் ஊழல் செய்த பணத்தை மீண்டும் மதுரை மாநகராட்சியே திரும்ப வசூல் செய்ய வேண்டும். அப்போதுதான் இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
- இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.
இதனிடையே, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே குற்றம்சாட்டியது. கேட்டை மூட கீப்பர் முயன்றபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என்று கூறிய தென்னக ரெயில்வே கேட் கீப்பரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேட் கீப்பரான வடமாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, ரெயில் விபத்து நிகழ்ந்த இடத்தை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் பேசிய அன்பழகன், காலை 7.10-க்கு ரெயில் வருவதை அறிந்து 7.06-க்கு கேட்டை, கேட் கீப்பர் மூடியுள்ளார். ரெயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் என இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தம் கொடுத்ததால் கேட்டை திறந்துள்ளார். கேட் கீப்பர் செய்தது தவறு தான். அப்படி திறந்திருக்கக்கூடாது என்று கூறினார்.
இதற்கிடையே, கடலூர் கலெக்டர் மீது தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் சுரங்க பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் கடந்த ஒரு வருமாக கலெக்டர் அனுமதி தரவில்லை என தெற்கு ரெயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
- எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான்.
- பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.
அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை. அதனால் பா.ஜ.க. வை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்.
முன்பு பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்று கூறுகிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. பிரசாரத்தின் தொடக்க இடம் என்பதால் அதனை ஒருங்கிணைப்பு செய்து அந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளனர்.
எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை முதலமைச்சர் திருவாரூர் வருகிறார். திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15-ந்தேதி மயிலாடுதுறைக்கு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று.
ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர். மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் 30 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.
சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை. அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது. பா.ஜ.க. அரசு ஆளில்லா ரெயில்வே கேட்டுக்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது.
பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
- இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான் சுந்தர் லாலை நியமித்ததுடன், அவர் தனது அறிக்கையை ஜூலை 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர் லால், கடந்த சில நாட்களாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து, 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று, மூடி சீலிடப்பட்ட உறையில் அவர் தனது இறுதி அறிக்கையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டால், சாத்தான் குளம் வழக்கு போல, இந்த வழக்கும் தாமதம் ஆகும் என்பதால், அதற்கு தடை கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றினால், இதே குற்றச்சாட்டை எழுப்பும் வாய்ப்புள்ளதாக கூறி அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் அஜித்குமாரின் தாயாருக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். கூடுதல் நீதிபதி தாக்கல் செய்துள்ள அறிக்கையை படித்து பார்த்தில், இவ்வழக்கில் விதிமீறல் மற்றும் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிய வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசாரணையை முடித்துள்ளார். மீதி விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் முடிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இன்னும் ஒரு வார காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாரி தனது விசாரணையை தொடங்க வேண்டும். இவ்வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
- கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்.
- வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது.
கடலூர்:
கடலூர் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே இன்டர்லாக்கிங் எனப்படும். கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும். சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, விபத்துக்குள்ளான பள்ளி வேனில் அடுத்த நிறுத்தத்தில் ஏற வேண்டிய பள்ளி மாணவன் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரெயில் கேட் திறந்திருந்ததை பார்த்தேன். வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது. கேட் கீப்பர் தான் உறங்கி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரும், ரெயில்வேதுறையில் நிகழும் குறைபாடுகளுமே காரணம் என்று கருதப்படுகிறது.
- வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
- விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்திற்கு கேட் கீப்பரின் அலட்சிமான நடவடிக்கையே காரணம் என கூறி பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். இதையடுத்து கேட் கீப்பரை பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்ற போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, ரெயில் விபத்துக்கு வேன் ஓட்டுநர் தான் காரணம் என்றும் கேட் கீப்பர் கேட்டை மூட்டத் தொடங்கியது போது, வேன் ஓட்டுநர் கேட்டை கடக்க அனுமதி கோரியதால் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்தாக தென்னக ரெயில்வே விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் சங்கரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறிகின்றனர் என கேட்டதற்கு அவர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் விபத்து குறித்து கேட்டதற்கு, கேட் திறந்தே இருந்ததால் தான் பள்ளி வேன் கிராஸ் செய்தது என்றும், ரெயில் ஒலியும் எழுப்பவில்லை என்றும் கூறினார். மேலும் கேட் கீப்பர் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. விபத்து நிகழ்ந்த பின்னரும் ரெயில்வே கேட் கீப்பர் வெளியே வரவில்லை என்று கூறினார்.






