என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரெங்கநாதருக்கு தயிர் சாதம், மாவடு, கீரை படைக்கப்பட்டது.

    ஜீயபுரம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-ம் நாளான நேற்று ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னொரு காலத்தில் ரெங்கநாதரின் பக்தையான மூதாட்டியின் பேரன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, பேரன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் மூதாட்டி ரெங்கநாதரை நோக்கி அழுதுள்ளார்.

    மூதாட்டியின் பக்தியால் மனம் உருகிய ரெங்கநாதர் பேரனாக தானே மூதாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மூதாட்டியின் கையால் தயிர் சாதம், மாவடு வாங்கி சாப்பிட்டதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி தேரோட்ட திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நடத்தி காண்பிக்கப்படும்.

    இதற்காக நேற்று அதிகாலையில் ரெங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜீயபுரம் சென்றார். அங்கு ரெங்கநாதருக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் வைத்து அமுது படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரெங்கநாதர் பல்லக்கில் அமர்ந்து அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை, போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் நண்பகலில் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தின் அருகில் உள்ள புன்னாகம் தீர்த்த குளத்தின் அருகில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் சர்க்கரை பொங்கல் இட்டு அமுது படைத்தனர்.

    பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு சொந்தமான ஆஸ்தான மண்டபத்தில் பாண்டியன்கொண்டை, அடுக்கு பதக்கம், நீலநாயகம், காசுமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இதில் ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் மாலையில் பல்லக்கில் அமர்ந்து காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.

    4-ம் நாளான இன்று (புதன்கிழமை) தங்க கருட வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 22-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

    23-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார். 25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.

    இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

    அதே பலத்துடன் இந்த முறையும் தி.மு.க. கூட்டணி களம் இறங்குவதால் அது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு உள்ளது.


    இந்த அணிக்கு எதிராக பாரதிய ஜனதா பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை அமைத்துள்ள அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளது.

    இப்படி தேர்தல் களத்தில் 3 அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. 3 அணிகளுக்கும் நாங்கள் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களம் காண்போம் என்று நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    * திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை.

    * பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது.

    * கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    * மத்தியில் அமைய போகும், ஆட்சி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமையவேண்டும் என்றார்.

    இதன்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்.

    * மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

    * நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    * குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    * காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

    * புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    * திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    * சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயா நிர்ணயிக்கப்படும்.

    * ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    * தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
    • திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கனிமொழி கூறினார்.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலில் பேசிய கனிமொழி எம்.பி., திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம் என கூறினார்.

    அதன்பின், தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
    • புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தன் போட்டி.
    • ஆரணி தொகுதியில் கஜேந்திரன் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தென்சென்னை- ஜெயவர்த்தன்

    வடசென்னை- ராயபுரம் மனோ

    காஞ்சிபுரம்- ராஜசேகர்

    ஆரணி-கஜேந்திரன்

    விழுப்புரம் பாக்கியராஜ்

    மதுரை- சரவணன்

    சேலம் -விக்னேஷ்

    ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்

    அரக்கோணம்- ஏ.எல்.விஜயன்

    கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்

    நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி

    கரூர் - தங்கவேல்

    நாகை -கர்ஜித் சங்கர்

    தேனி- நாராயணசாமி

    ராமநாதபுரம்- ஜெயபெருமாள்

    சிதம்பரம்- சந்திரகாசன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி நேற்று சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    கோவை:

    கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நடைபெற்றது. சாய்பாபா காலனி சிக்னல் அருகே தொடங்கிய இந்த வாகன பேரணியானது ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது.

    சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் அழைத்து வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் இது தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகளை சரியாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாக சட்டப்பிரிவு 75 ஜே.ஜே.-ன் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்னதாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் நேற்று சாய்பாபாகாலனியில் உள்ள சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று காலை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் அந்த பள்ளிக்கு சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணை தொடர்பாக கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கோவை தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    • சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    சங்கராபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் யாரும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சங்கராபுரத்திலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த லோடு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த செவத்தான்(51), மற்றும் அவரது உறவினரான டிரைவர் சின்னப்பன் (36) என்பதும், அவர்கள் இருவரும் ஆடு வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் 28 ஆடுகளை அத்தியூர் வார சந்தையில் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து வாணாபுரம் தாசில்தார் குமரனிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
    • சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.

    சென்னை:

    உலகின் முதல் தமிழ் 'ஹைப்பர்லோக்கல்' செயலி என்கிற பெருமித அடையாளத்துடன் கடந்த ஜனவரி 22-ந்தேதி மின்மினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் மின்மினி செயலியை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்னும் சிறப்பான விதத்தில் அடுத்தகட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது மின்மினி. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான அன்பை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியின் சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது மின்மினி.

    இதுகுறித்து மின்மினியின் செயல் துணை தலைவர் எஸ்.ஸ்ரீராம் கூறியதாவது:-

    இது எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான தருணம். சி.எஸ்.கே அணியுடன் இணைவதன் மூலம் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுடனும், குறிப்பாக தமிழக மக்களுடனும் இன்னும் நெருக்கமாக பயணிக்க போகிறோம் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் எங்களது பயனர்களுக்கு சிறப்பான பரிசுகளை கொடுக்க திட்டமிட்டுளோம். ஆர்வமுள்ள பயனர்கள் சிஎஸ்கே அணியையும், வீரர்களையும் வாழ்த்தி #minminiCSK என்ற ஹேஷ்டாக்-உடன் வீடியோவை மின்மினியில் வெளியிட வேண்டும்.

    இந்த போட்டியில் பயனர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் வெளியிடப்போகும் அனைத்து வீடியோக்களையும் எங்கள் மின்மினி நடுவர் குழு பார்த்து பரிசீலனை செய்த பிறகு வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடக்கும் நாளிற்கு முந்தைய நாள் இரவு 8 மணிக்கு நடுவர் குழு தேர்வு செய்த வெற்றியாளர்களின் விவரம் மின்மினி செயலியில் அறிவிக்கப்படும்.

    உலகத் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மின்மினி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு அம்சத்தையும் மின்மினி செயலியில் கொண்டுவந்துள்ளோம். இதில் பயனர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தலாம், பிற பயனர்களுடன் கலந்துரையாடலாம், பொது மற்றும் தனிப்பட்ட குழுக்களை உருவாக்கலாம்.

    மின்மினி அனைவருக்குமான டிஜிட்டல் தளமாக செயல்படும் குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள், அங்கீகரிப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்கள், மேலும் எங்கள் அணியால் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்டி சேனல் நெட்வொர்க் குழுக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான வாய்ப்பை மின்மினி வழங்குகிறது.

    இத்தனைக்கும் மகுடம் வைத்தது போல தற்போது சி.எஸ்.கே அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது, எங்களது இளம் மின்மினி குழுவிற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. மேலும் சி.எஸ்.கே ரசிகர்களை குதூகலப்படுத்தும் நோக்கில் எங்களது முயற்சிகள் அமையும்.

    மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். சி.எஸ்.கே போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்களை வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்மினி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் பார்ட்னர்ஷிப் குறித்து சி.எஸ்.கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறுகையில், 'உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகியுள்ள மின்மினி செயலியுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு பல ஆச்சரியமூட்டும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
    • வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அரசாணையை திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

    வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார்.
    • மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. நரேந்திர மோடி மீது உள்ள பாசத்தால் வந்த கூட்டம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தி.மு.க.வினரால் பட்டியல் கொடுக்க முடியுமா? மீண்டும் தாமரை மலரும். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இதுவரைக்கும் ஆளும் கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வரமுடியாது என்று உட்கார்ந்து இருக்கின்றனர். நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை அனைவரும் பார்க்க போகிறார்கள்' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மோடி போன்று பிரசாரத்திற்கு வேறு எந்த பிரதமரும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பிரமிப்பாக பார்க்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார். தேர்தலில் போட்டியிட இதுவரை நான் (குஷ்பு) சீட் கேட்கவில்லை' என்றார்.

    • சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
    • சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இதில் எழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.

    அதில் தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள் பெறப்பட்டிருந்தது.

    அண்ணா அறிவாலயத்திற்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்களும் பரிந்துரையாக வந்திருந்தது. 40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளததை தொடர்ந்து, தேர்தல் அறிக்கை நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×