search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிரதமர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

    • கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி நேற்று சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
    • பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    கோவை:

    கோவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நடைபெற்றது. சாய்பாபா காலனி சிக்னல் அருகே தொடங்கிய இந்த வாகன பேரணியானது ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை நடைபெற்றது.

    சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையுடன் அழைத்து வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் மாணவ-மாணவிகளின் புகைப்படத்துடன் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உரிய விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் இது தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது குழந்தைகளை சரியாக பராமரிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாக சட்டப்பிரிவு 75 ஜே.ஜே.-ன் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்னதாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் நேற்று சாய்பாபாகாலனியில் உள்ள சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று காலை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் அந்த பள்ளிக்கு சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணை தொடர்பாக கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் விவகாரம் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு கோவை தேர்தல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×